இதைச் சொல்லியே ஆகவேண்டும்
மகனுக்குத் தெரிந்த பையன்; தினேஷ் குமார் என்று பேர்; +2 மாணவன்; கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறான். பெற்றோர் திட்டியதால் நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் தனியாயிருக்கும் போது தற்கொலை செய்து கொண்டான்.
இப்படி ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அருகில் தெரிந்தவர்களுக்கு நேரும்போது பாதிப்பின் வீச்சு நம்மை அதிகமாய்தான் தாக்குகிறது. இதில் குற்றவாளி என்று யாரைத் தீர்ப்பிடுவது.
ஜெயந்தி எழுதிய 'பந்தயக்குதிரைகள்' கதையில் சொல்லப்படுவது மாதிரி............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே! அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.............என்பதான இந்த பெற்றோர், ஆசிரியர்களின் மனப்பாங்கு அதிர்சியாகத்தான் இருக்கிறது.
சில பள்ளிகளில் இந்த பத்தாவது, +2 பயிலும் மாணவர்களை இவர்கள் நடத்தும் விதம்..... இவர்கள் மனிதப் பிறவிகளா அல்லது நிரலி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கணிணிகளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
பேரசைபிடித்த இவர்களின் தீவிரத்தால்தான் உணர்வுகளும், சுதந்திரமும், இயற்கை சார்ந்த ஈடுபாடும், உறவுகளும் நிறைந்த மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம் சத்தமிலாமல் மெள்ள பிறந்து கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு மனதை சோகமாக்குகிறது.
இப்படி ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அருகில் தெரிந்தவர்களுக்கு நேரும்போது பாதிப்பின் வீச்சு நம்மை அதிகமாய்தான் தாக்குகிறது. இதில் குற்றவாளி என்று யாரைத் தீர்ப்பிடுவது.
ஜெயந்தி எழுதிய 'பந்தயக்குதிரைகள்' கதையில் சொல்லப்படுவது மாதிரி............வாழ்க்கை என்பது பந்தயம் மட்டுமே! அதில் ஜெயிப்பதற்கான ஓட்டம் ஒன்றே இவர்களின் முழுமுதல் சிந்தனை.............என்பதான இந்த பெற்றோர், ஆசிரியர்களின் மனப்பாங்கு அதிர்சியாகத்தான் இருக்கிறது.
சில பள்ளிகளில் இந்த பத்தாவது, +2 பயிலும் மாணவர்களை இவர்கள் நடத்தும் விதம்..... இவர்கள் மனிதப் பிறவிகளா அல்லது நிரலி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கணிணிகளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
பேரசைபிடித்த இவர்களின் தீவிரத்தால்தான் உணர்வுகளும், சுதந்திரமும், இயற்கை சார்ந்த ஈடுபாடும், உறவுகளும் நிறைந்த மனிதகுலத்தின் அடுத்த பரிணாமம் சத்தமிலாமல் மெள்ள பிறந்து கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு மனதை சோகமாக்குகிறது.
2 Comments:
At 11/19/2006 2:01 AM , thiru said...
வெற்றிகளை கொண்டாட தெரிகிற நமக்கு தோல்விகளை எதிர்கொள்ள தெரியவில்லையோ என எண்ணம் வருகிறது.
மாணவர்களை தண்டிப்பது மட்டுமே தீர்வாக நமது ஆசிரியர்களும், பெற்றோர்களும் (பெரும்பாலும்) கருதுவது வேதனை!
At 11/19/2006 2:16 AM , மாசிலா said...
இப்போதெல்லாம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெறும் பந்தயக்குதிரை என் வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை முழுதும் மறுக்கின்றனர். திறமையாக(?) படித்து, நல்ல(?) பட்டம் வாங்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். இதுதான் இக்கால பெற்றோர்களின் கனவு. குழந்தைகளை மனிதர்களாக பார்க்காமல், பணம் சம்பாதிக்கும் வெறும் ஒரு இயந்திரமாக வளர்க்கப்படுகிறார்கள். வாலிப வயதில் இதனால் பல மன உள பிரச்சினைகள் வருவது நிச்சயம்.
அன்பு, பாசம், சகிப்புத்தன்மை, பொறுமை, நிதானம் இவைகளே பிள்ளைகளே நல்ல வழியில் கொண்டு செல்லும்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home